பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தனியா நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார் அவர் கூறியதாவது, முஸ்லிம்களுக்கு எனது எச்சரிக்கை என்னவென்றால் காங்கிரசின் வாக்கு வங்கியாக மாறாதீர்கள். மேலும் இந்துக்களுக்கும் மற்றவர்களுக்கும் எனது எச்சரிக்கை என்னவென்றால் காங்கிரஸ் கட்சியின் பிரித்து ஆட்சி செய்யும் கொள்கைகளால் பாதிக்கப்படாதீர்கள்.

எப்போதும் முஸ்லிம்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் ஆணித்தனமாக நம்புகிறது. அந்த சிந்தனை செயல்பாட்டிற்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு அபிவிருத்தி அடையும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்துக்களை பிளவுபடுத்தும் அதே வேளையில் முஸ்லிம்களை தனது வாக்கு வங்கியாக வைத்திருப்பதை காங்கிரஸ் கட்சியின் திட்டமிடல்.

எஸ்.சி, எஸ்.டி, மற்றும் ஓ.பி.சி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ராகுல் காந்திக்கு ஏபிசிடி கூட தெரியாது. அவர் எப்போதும் எஸ்,சி, எஸ்,டி, ஓ.பி.சி மக்களை பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார். கடந்த 60 ஆண்டுகளில் உங்களை ஏழைகள் ஆக்கியது யார் என்று எங்கள் முஸ்லிம்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன். பிரதமர் மோடி இன்று உங்களுக்காக வங்கி கணக்குகளை திறந்து உங்களுக்காக வீடுகளை கட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். மின்சாரம் தண்ணீர் கடன்கள் வழங்குகிறார்.

அனைத்து இந்தியர்களையும் சமமாக நடத்துகிறார். அந்த பலன் எல்லாருக்கும் கிடைக்கிறது. அப்படி இருக்க ஏன் முஸ்லிம் வாக்கு காங்கிரசுக்கு போக வேண்டும். ஒரு சமூகத்தை தவறாக பயன்படுத்துவது தவறான நோக்கம் காங்கிரஸ் நான் எச்சரிக்கிறேன் முஸ்லிம்களை வாக்கு வங்கியாக ஆக்காதீர்கள். இந்த முறை சிறுபான்மை வாக்குகள் காங்கிரஸுக்கு போகாமல் பார்த்துக் கொள்வோம். நாங்கள் தெளிவான பார்வையுடன் மக்களிடம் செல்வோம் என கூறியுள்ளார்.