
ஜம்மு காஷ்மீரில் சோனமார்க் என்ற பகுதியில் சுரங்க பாதை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு பணியாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் மருத்துவர் ஆவார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்தில் சூழ்ந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு புலம்பெயர் தொழிலாளர்கள் மீது இப்படி தாக்குதல் நடத்தியது ஏற்கக் கூடியது அல்ல என்று தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமாக என்று விமர்சித்துள்ளார்.