பிரான்ஸ் நாட்டில் எவிக்நோன் என்ற பகுதியில் 57 வயதான பெண் ஒருவர் தனது நாயை நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் அந்த பெண்மணியை கட்டி அணைத்து வலுக்கட்டாயமாக முத்தமிட முயற்சித்துள்ளார். இதனால் அந்த பெண்மணி அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அவரது நாக்கை கடித்து விட்ட அதோடு அங்கிருந்து தப்பியுள்ளார். இதனை அடுத்து அந்த பெண் வீடு திரும்பியவுடன் தனது சகோதரரிடம் நடத்த சம்பவத்தை கூறியுள்ளார். இது குறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் அந்த பெண்மணி கடித்த அவரது நாக்கின் ஒரு பகுதியும் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் அந்த பெண்மணி போலீசாரிடம் கூறியதாவது “என்னை அந்த நபர் துஷ்பிரயோகம் செய்ய முயன்றார். மேலும் எனது தொடை பகுதியில் கை வைத்தார்” என்று கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். இந்த விசாரணையில் துனிசியாவைச் சேர்ந்த 30 வயதுடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் சட்டவிரோதமாக இங்கு வந்து தங்கி இருக்கின்றார். அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.