பிரபல இந்தி நடிகையான ராக்கி சாவந்த்(41) கடந்த 2019 ஆம் வருடம் ரிதேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 2022 ஆம் வருடம் ராக்கி சாவந்த்தும்-ரிதேசும் விவாகரத்து பெற்றனர். இந்த விவாகரத்துக்கு பிறகு ராக்கி சாவந்த் கடந்த வருடம் தன் காதலனான அடில் கான் துரானியை 2வது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தன் கணவர் அடில் கான் துரானி தன்னிடம் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாகவும், தன்னை தாக்குவதாகவும், தனது பணம் நகைகளை பறித்துக் கொண்டதாகவும் ராக்கி சாவந்த் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதோடு இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபடுவதாகவும், மதவழிபாடு செய்ய கட்டாயப்படுத்துவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ராக்கி சாவந்த். அதன்பின் ராக்கி சாவத் அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அடில் கான் துரானியை கைது செய்தனர்.