வடமாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை.  நடப்பு ஆண்டு மார்ச் 7,8,9 போன்ற தேதிகளில் ஹோலி பண்டிகையானது வடமாநிலங்களில் வெகு விமர்சையாக நடைபெறயிருக்கிறது. இதனால் வட மாநில அரசுகள் பள்ளிகளுக்கும், அரசு அலுவலகத்திற்கும் விடுமுறை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 6,7 ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதன்பின் உத்தரபிரதேச மாநிலத்திலும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வரும் மார்ச் 7, 8 ஆகிய தேதிகளில் ஹோலி பண்டிகை காரணமாக பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மார்ச் 9 ஆம் தேதி அன்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஹோலி பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரப்பிரதேச அரசானது அறிவித்துள்ளது.