ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா – ஈரான் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் நடுவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு அணி வீரர்களும் மாறி மாறி நடுவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பான இறுதி கட்டத்தில் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..

போட்டி முழுவதும் வீரர்கள்/பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே நிறைய வாக்குவாதங்கள் நடந்தன, இந்திய வீரர்கள் எழுந்து நிற்க மறுத்துவிட்டனர். ஹாங்சோவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது..

என்ன முடிவை எடுப்பது என தெரியாமல் நடுவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.போட்டி முடிய இரண்டு நிமிடங்கள்  உள்ள நிலையில் 20 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போட்டியில் இறுதி முடிவில் எடுக்க முடியாமல் நடுவர்கள் திணறி வருகின்றனர்.

https://twitter.com/TheCrickFun/status/1710574840963600783