
மத்திய கலாச்சார துறை சார்பில் காஷ்மீரின் கலாச்சார பண்பாடு மற்றும் அங்குள்ள கலைகள், பெருமைகளை கூறும் அடிப்படையில் VITASTA எனும் தலைப்பில் சென்னை திருவான்மியூரிலுள்ள கலாக்ஷேத்ராவில் 3 நாட்கள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
அப்போது ஆளுநர் பேசியதாவது “நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டத்தின் ஒரு பகுதியாக காஷ்மீரில் பாரம்பரிய உணவுகள், உடைகள், அவர்கள் பயன்படுத்தும் பல கலைப்பொருட்கள் போன்றவை இங்கே அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்திருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது அரசியல் வார்த்தை மட்டுமல்ல, நம் வாழ்வியலும் அடங்கும் என்று சொல்லிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, காஷ்மீருக்கும் தமிழ்நாடுக்கும் பல தொடர்புகள் இருப்பதை சுட்டிக் காட்டினார். நமது பாரம்பரிய பெருமையையும், பொருளாதாரத்தில் தலை சிறந்த நாடு என்ற பெயரையும் மீட்டெடுக்க வேண்டும். அதற்குரிய பணிகளை நாம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார்.