சென்னையில் உள்ள தோல் பொருள் நிறுவனத்தின் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக சோதனை மேற் கொண்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள கிண்டியில் ஹேண்ட் பேக், ஆடைகள், காலணிகள் போன்ற பொருட்களை  தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் அலினா என்ற தோல் பொருள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள் அமைந்துள்ள கிண்டி, குரோம்பேட்டை, பெரிய மேடு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டார்கள்.

அதோடு இந்த நிறுவனத்தில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகளின்வீடுகளிலும் 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள். நேற்று சோதனை நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் சோதனை நடைபெறுகிறது. மேலும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் தோல் தயாரிப்பு நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்கிறார்கள்.