நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு 37 வயதான இவர் அந்நாட்டின் பிரதமராக தேர்வாக போது உலகின் மிக இளம் பெண் பிரதமராக உருவெடுத்தார். இதனைத் தொடர்ந்து வருகின்ற அக்டோபர் மாதத்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி ராஜினாமா செய்வதாகவும் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான முழுமையான காரணத்தை அவர் கூறவில்லை.