தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கான காலை உணவு திட்டம் 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்படும். பள்ளிவாசலுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ஆறு கோடியில் இருந்து பத்து கோடியாக உயர்த்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.