டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு பல வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து விட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பலரும் வரவேற்கும் நிலையில், நடிகர் சூர்யாவும் ஆதரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நம் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும் படி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கிறது. இந்த தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழக அரசுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை எதிர்த்து போராடிய அனைவருக்கும் தலைவணங்கி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.