சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பலவீனமான இதயம் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாழை மரத்தில் கூடு கட்டி, குஞ்சைப் பாதுகாக்கும் கழுகு ஒன்று, அதன் குஞ்சைத் தின்ன வந்த விஷப் பாம்புக்கு மறக்க முடியாத பாடம் புகட்டிய காட்சி இதில் இடம்பெற்றுள்ளது.
கழுகு, பாம்பை தனது கூரிய நகங்களால் பிடித்து, அதன் வாயைத் திறந்து, ஒவ்வொரு பல்லாக உருவி எறிந்தது. பாம்பு இதற்கு முன் இப்படியொரு நிலையை கற்பனை செய்திருக்கவே முடியாது. இந்த வீடியோ, பார்ப்பவர்களின் இதயத்தை பதற வைக்கும் வகையில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
வீடியோவில், கழுகு பாம்பின் பற்களை மட்டுமல்ல, அதன் சிவப்பு நாக்கையும் வெட்டி எறியும் காட்சி இடம்பெற்றுள்ளது. பாம்பு, கழுகின் பலமான பிடியிலும், கூரிய அலகின் தாக்குதலிலும் எதுவும் செய்ய முடியாமல் தவித்தது. ஒரு கட்டத்தில் பாம்பு வாயை மூட முயன்றபோதும், கழுகு தொடர்ந்து அதன் பற்களையும் நாக்கையும் அழித்தது.
இந்த வீடியோ, ‘Animals February’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டு, லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது. பலர் இதைப் பாராட்டி ‘ஹர் ஹர் மஹாதேவ்’ என கமெண்ட் செய்தாலும், சிலர் இது AI-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ என்றும், போலியானது என்றும் கூறியுள்ளனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தபடவில்லை, ஆனால் இது AI-ஆல் உருவாக்கப்பட்டதாகத் தோன்றுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
