ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, “காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை. அவர்கள் நாட்டின் துயரத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த தாக்குதலின் போது சுற்றுலா பயணியை தனது தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவிய காஷ்மீர் மக்களின் மனிதாபிமானத்தை சற்று கவனியுங்கள். பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுங்கள். ஆனால் அப்பாவி காஷ்மீர் மக்கள் மீது கருணை காட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதோடு இந்த தாக்குதலின் போது சம்பவ இடத்தில் இருந்த காஷ்மீர் மக்கள் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருநாள் முழுவதும் உணவு எதுவும் வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனை பார்க்கும் போது காஷ்மீர் மக்கள் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் நிலையில் அவர்கள் உங்களுடன் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் மீது துன்புறுத்தல் இல்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.