
சீனாவில் லியானிங் மாகாணத்தில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் பல விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பூங்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த புலியின் வயிற்றில் இருந்த முடிகளை சுற்றுலா பயணிகள் பிடுங்கிய செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
புலியின் உரோமம் தீய சக்திகளை அகற்றும் என்று அந்நாட்டில் நம்பப்படுகிறது. இதன் காரணமாக அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புலியின் வயிற்றில் உள்ள முடியை பிடுங்கி எடுத்துக் கொண்டு செல்கின்றனர். இதனால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதால் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்று பூங்கா நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.