சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு பகீர் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் சிங்கத்தின் கூண்டின் மிக அருகில் சென்று சலம்பல் செய்ய, எதிர்பாராத விதமாக சிங்கம் அவரது காலைப் பிடித்துக் கொண்டது. உண்மையில், காட்டின் ராஜாவான சிங்கத்தின் வலிமை மிக அதிகம், அது ஒருமுறை கோபப்பட்டால், அதன் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது.

ஆனால், இந்த வீடியோவில் அந்த நபர் கேளிக்கைக்காகவோ அல்லது சாகசத்திற்காவோ சிங்கத்துடன் விளையாட முயன்றபோது, அடுத்த நொடியே சிங்கம் அவரது காலைத் தன் வாயால் லேசாகக் கவ்விப் பிடித்துக் கொண்டது.

இது ஒரு சினிமாவை விடவும் திகில் நிறைந்த காட்சியாக இருக்க, அருகில் இருந்த மற்றொரு நபர் ஓடி வந்து, ஒரு குச்சியால் சிங்கத்தை அடித்து, அதன் பிடியிலிருந்து அந்த நபரின் காலை மீட்க முயல்கிறார். இதில் அந்த நபரின் நல்ல நேரத்தால் உயிர் பிழைத்திருந்தாலும், நிலைமை எப்போது வேண்டுமானாலும் விபரீதமாகியிருக்கலாம்.

இந்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவி, நெட்டிசன்களைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. பலர், “இப்படிப்பட்ட விபத்துகளுக்கு மனிதனின் முட்டாள்தனமே காரணம்,” என்றும், “இதில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், குற்றத்தை விலங்கு மீதுதான் சுமத்துவார்கள்,

ஆனால் நிஜமான தவறு மனிதனுடையது” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர், சிங்கம் தன் முழு ஆக்ரோஷத்தைக் காட்டாமல் பொறுமையாகக் கவ்விய பிடியின் திறமை மற்றும் பொறுமையைப் பாராட்டியுள்ளனர்.

இந்தக் காட்சிகள் ஒரு முக்கியமான பாடத்தை உணர்த்துகின்றன. காட்டு விலங்குகள், அவை கூண்டுக்குள் இருந்தாலும் சரி, திறந்தவெளியில் இருந்தாலும் சரி, அவற்றின் இயல்பு மாறாது. சாகசம் என்ற பெயரில் அவற்றுடன் விளையாட முயல்வது அல்லது தொந்தரவு செய்வது மிகவும் ஆபத்தானது மற்றும் உயிருக்கே உலை வைப்பதாக முடியும் என்ற எச்சரிக்கையை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.