குமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜான் கிறிஸ்டோபர் இருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று பள்ளிக்கு வந்த இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர் தனது குழந்தை இந்த பள்ளியில் தான் படிக்கிறார், எனது குழந்தையை பார்க்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களும் கூறியுள்ளார். அப்போது குழந்தையை பார்க்க யார் வந்தாலும் அனுமதிக்க வேண்டாம் என்று குழந்தையின் தந்தை கூறியுள்ளதால் அவரது அனுமதி இருந்தால் மட்டுமே குழந்தையை பார்க்க முடியும் என்று இளம் பெண்ணிடம் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

அதனால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்த திடீரென அப்பெண் தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அறைந்தார். இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இளம் பெண், கூலி தொழிலாளியான தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டு குழந்தைகள் தந்தையிடமும் ஒரு குழந்தை தாயிடமும் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. பெண்ணை காவல்துறையினர் தேடி வரும் நிலையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.