
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி வருகிறது. இஸ்ரேல் வான் பாதுகாப்பை தகர்த்து ஈரான் ஏவுகணைகள் தாக்கி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றுமான சூழல் நிலவு வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறி வைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வரும் நிலையில் அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில் ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை கைவிடச் செய்யும் வகையில் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்களை குறி வைத்த இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சி படைத்த தளபதி, 2 அணு ஆயுத விஞ்ஞானிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஈரான் ஏவியது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.