கர்நாடகா ஹாசன் மாவட்டத்திலுள்ள அர்சிகெரே பகுதியில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐபோனை வாங்குவதற்கு பணம் இல்லாததால் ஒருவர், டெலிவரி செய்ய வந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இதற்கிடையில் கொலை செய்தவரும் ஒரு டெலிவர் ஏஜென்ட் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அதாவது, கொரியர் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக உள்ள ஹேமந்த் தத்தா(20), பிளிப்கார்டு டெலிவரி ஏஜென்ட் ஹேமந்த் நாயக்கின் (23) உடலை ஒரு சாக்குப் பையில் போட்டு வீட்டில் மறைத்து வைத்து 3 நாட்களுக்கு பின் ரயில்வே தண்டவாளத்தின் அருகில் வீசிவிட்டு சென்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதோடு அந்த சாக்குப்பைக்கு அவர் தீவைத்துவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தத்தாவை கைது செய்தனர்.