இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் மொத்தம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

மீதமுள்ள 3 இடத்தை பிடிப்பதற்கு தற்போது கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இன்று டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கும் 67-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதுகிறது. இதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகிறது.