IPL Playoff போட்டிகள் மே 23 மற்றும் 24 அதாவது இன்றும் நாளையும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிகளை காண செல்லும் ரசிகர்கள் மெட்ரோ ரயிலை பயன்படுத்தினால் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.

மேலும் இன்றும் நாளையும் மெட்ரோ ரயில் இரவு ஒரு மணி வரை இயக்கப்பட உள்ளது. லீக் போட்டியின் போது போட்டிக்கான டிக்கெட் வைத்திருந்தால் மெட்ரோவில் இலவச பயணம் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்று மற்றும் நாளை நடைபெறும் போட்டிகளை காண கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டுமென மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.