உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக சுப்மன் கில்  தான் அதிகமாக ரன்களை அடிப்பார் என இந்திய அணியின்  முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறி உள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின்இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.  இந்த போட்டியில்  சுப்மன் கில் தான் இந்தியாவுக்காக அதிக ரன் அடிப்பார் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது  தொடர்பாக பேசிய அவர் விராட் கோலி மற்றும் முகமது ஷமி ஆகியோர்  நம்ப முடியாத அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் அசத்து வருவதாக  தெரிவித்தார். எனினும் அகமதாபாத் மைதானம் சுப்மன் கில்லுக்கு மிகவும் பிடித்த மைதானம் ஆகும். அவர் எப்போதுமே அகமதாபாத் மைதானத்தில் அதிக ரன் அடிக்க விரும்புவார்.  எனவே இறுதிப் போட்டியில் அவர் பெரிய ரன்களை அடிப்பார்  என கணிப்பதாக தெரிவித்தார்.