இந்தியாவில் மே 11-ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் கடந்த 9 வருடங்களில் இந்தியா தொழில்நுட்பத் துறையில் அமோக வளர்ச்சி அடைந்துள்ளது என்றார். மேலும் தொழில்நுட்பத் துறையின் இந்த வளர்ச்சிக்கு மோடி அரசு தான் காரணம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.