
கத்தாரை சேர்ந்த 28 இந்தியர்கள் கென்யாவுக்கு சுற்றுலா செல்வதற்காக சுற்றுலா பேருந்தில் பயணித்துள்ளனர். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.
அந்த விபத்தில் சிக்கிய 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேருந்தில் பயணித்த 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் விபத்தில் உயிரிழந்த 5 பேரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய தூதரகம் தகவல் அளித்துள்ளதாகவும், தங்களது இரங்கல்களையும் தெரிவித்துள்ளது.