INDIA கூட்டணி ஆட்சியமைத்த பிறகு ‘அக்னிவீர் திட்டம்’ குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகேந்திரகர் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “அக்னிவீர் திட்டம் என்பது இந்திய ராணுவத்தின் திட்டமில்லை. அந்த திட்டம் நமக்கு தேவையும் இல்லை. நம்முடைய நாட்டின் இளைஞர்களின் மரபணுவில் தேசப்பற்று இருக்கிறது.

அவர்களை பாஜக தொழிலாளர்களாக மாற்றிவிட்டது. அவர்களுக்கு உரிய மரியாதை செய்து தர வேண்டும். எனவே INDIA கூட்டணி ஆட்சியமைத்த பிறகு ‘அக்னிவீர் திட்டம்’ குப்பைத் தொட்டியில் வீசப்படும்” எனக் கூறியுள்ளார்.