மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் அபிலஷா பௌசாஹேப் கோதிம்பிரே(25) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி ஊழியர். இவர் நேற்று தனது தோழி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென 21 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நான் வாழ்ந்து முடித்து விட்டேன் இனிமேல் எனக்கு வாழ விருப்பம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துள்ளார். மேலும் அந்த கடிதத்தில் இந்த முடிவை எடுத்ததற்காக பெற்றோர்கள் மற்றும் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் எழுதியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.