பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழக மாணவி FIR  காப்பி வெளிவந்தது குறித்து திமுக அரசை கண்டித்து சாட்டையால் தன்னைத்தானே அடித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இது சமீபத்தில் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பலரும் தங்களது விமர்சனங்களையும், கருத்துக்களையும் முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது,”அரசியல் தலைவராக பார்க்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனாக பார்த்தால் நான் செய்தது சரி. அரசியல் சிஸ்டம் பெயில் ஆகும்போது அடிமனதிலிருந்து வரக்கூடிய கோபம்.

நேர்மையாகவும், நடுநிலையாகவும் இருக்க வேண்டிய காவல்துறை நடுநிலையாக இருக்கிறதா?. FIR காப்பி வெளி வருவதற்கு வாய்ப்பே இல்லை. கவனிக்கப்பட வேண்டிய இடத்தில் உள்ள மனிதர்களுடன் அமைச்சர்கள் உணவருந்துவது போன்ற புகைப்படங்கள் வெளியாவதை அனைவரும் பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக குரல் கொடுத்தால் கைது செய்யப்படுகிறோம். எந்த வழியும் இல்லை. அதனால்தான்  இது மாதிரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இதனை ஒரு வேள்வியாக எடுத்து செயல்பட்டு வருகிறேன். என்று அண்ணாமலை கூறினார்.