பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை லாவண்யா. இவர் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது தான் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாக பரபரப்பு தகவலை கூறியுள்ளார் லாவண்யா. அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் நடிகை லாவண்யாவின் குரலை வைத்து பலர் கேலி செய்வார்களாம்.

ஆரம்பத்தில் நடிக்க வந்த போது குடும்பத்தினர் நடிக்க கூடாது என பல எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இதற்காக குடும்பத்தினருடன் லாவண்யா போராடியுள்ளார். அந்த சமயத்தில்தான் லாவண்யா தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த தகவலை தற்போது லாவண்யா கூறியுள்ளது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை லாவண்யாவுக்கு இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் பாலோயர்ஸ் இருக்கிறார்கள்.