
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் capitalmind நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் CEO தீபக் ஷெனாய். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டிருந்ததால் தனது அலுவலகத்திற்கு பேருந்தில் சென்றிருக்கிறார். அப்போது பேருந்தில் கட்டணமாக ரூ. 6 வசூலிக்கப்பட்டதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் ” ரூ.6 கொடுத்து பேருந்தில் பயணம் செய்து 30 நிமிடத்தில் என்னுடைய அலுவலகத்திற்கு வந்துவிட்டேன். என்னால் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை” என்று பதிவிட்டுள்ளார். அதோடு பேருந்தில் QR கோடு மூலம் பணம் செலுத்தக்கூடிய வசதியும் இருந்ததாக பதிவிட்டுள்ளார். இவர் அடிக்கடி ஏசி பஸ் மெட்ரோ போக்குவரத்தை பயன்படுத்தி வந்த அவர் தற்போது முழங்கால் வலி காரணமாக ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 6 கட்டணம் கொடுத்து சாதாரண பேருந்தில் பயணம் செய்துள்ளார். இது அளவுக்கு மீறிய சேமிப்பு போல் இருந்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.
I took a bus for Rs. 6(!!) today and walked 30 min to office. I’m still stunned that there’s something that costs Rs. 6.
— Deepak Shenoy (@deepakshenoy) April 2, 2025
இவருடைய பதிவு வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் ஒரு பெரிய நிறுவனத்தில் CEO பொது போக்குவரத்தை பயன்படுத்தியது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மிகவும் ஆச்சரியமாக இருப்பதாகவும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் . மேலும் சில பயனர்கள் இந்த பதிவானது பெரும்பாலான இந்தியர்களின் வாழ்க்கையை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது என்று பதிவிட்டு வருகிறார்கள் .