இன்றைய காலகட்டத்தில் பள்ளிக்கூடங்களில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடங்களை சொல்லிக்கொடுப்பதற்கு பதிலாக தவறான பாதைகளில் செல்கிறார்கள் என்றே சொல்லலாம்.  அந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் மிக மோசமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற ஒரு சில கேவலமான ஆசிரியர்களால்  மாணவிகளின் கல்வி மட்டுமல்ல அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் வீணாகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கன்னௌஜை சேர்ந்த ஆசிரியர் 8ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நான் உன்னை நேசிக்கிறேன். விடுமுறை நாளில் உன்னை மிஸ் செய்கிறேன். நான் உன்னிடம் நிறைய பேச வேண்டும். பள்ளிக்கு அனைவருக்கும் முன் சீக்கிரமாக வந்தால், இருவரும் பேசி புரிந்து கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதை மாணவி பெற்றோரிடம் கூறியதையடுத்து போலீசில் புகார் அளித்தனர். ஆசிரியர் தலைமறைவு.