இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். மார்ச் 31-ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. தற்போது அனைத்து வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஷிகர் தவான் தனக்கு 14 வயது இருக்கும் போது எச்ஐவி பரிசோதனை செய்துள்ளதாக தற்போது கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 14 வயதில் ஷிகர் தவான் முதுகில் டாட்டூ குத்திக்கொண்டாராம்.

இதை அவருடைய பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு அவரின் தந்தை டாட்டூவை பார்த்ததால் ஷிகர் தவானை அடித்துள்ளார். நான் டாட்டூ குத்திய பிறகு கொஞ்சம் பயந்தேன். எனக்கு குத்திய ஊசியை வைத்து இன்னும் எத்தனை பேருக்கு குத்தப்பட்டது என்ற தகவல் எனக்கு தெரியவில்லை. இதனால் நான் எச்ஐவி பரிசோதனை செய்து கொண்டேன். அது இன்று வரை நெகட்டிவ் ஆக உள்ளது. நான் முதன் முதலாக தேள் டாட்டூவை என் முதுகில் குத்திக் கொண்டேன். பிறகு அதை ஒரு டிசைன் செய்தேன். இதைத்தொடர்ந்து சிவபெருமான் மற்றும் அர்ஜுனன் போன்றோர்களின் டாட்டூவையும் குத்திக் கொண்டேன் என்று கூறியுள்ளார். மேலும் ஷிகர் தவான் தனக்கு 14 வயது இருக்கும் போது எச்ஐவி பரிசோதனை செய்து கொண்டதாக சொன்ன தகவல் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.