ஹிந்தி சினிமா உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமாரின் சென்ற சில படங்கள் சுமாரான வசூலை கூட பெற முடியாமல் திணறி வருகின்றது. மலையாளத்தில் ரிலீசான டிரைவிங் லைசன்ஸ் திரைப்படத்தை ரீமேக் செய்து ஹிந்தியில் செல்பி என்ற பெயரில் ரிலீசானது. இந்தியில் இத்திரைப்படத்தில் அக்ஷய் குமார், இம்ரான் ஹஸ்மி என பலர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் ரிலீஸ் ஆகி மோசமான வசூலை ஈட்டி இருக்கின்றது.

இந்தியா முழுவதும் முதல் நாள் வசூலாக இரண்டரை கோடி வரை தான் வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். தென்னிந்திய திரைப்படங்களின் தாக்கத்திலிருந்து பாலிவுட் இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் தனது திரைப்படம் தோல்வி குறித்து அக்ஷய்குமார் பேசியுள்ளார்.

இப்படி நடப்பது முதல் முறை கிடையாது. ஒரே நேரத்தில் 16 தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்திருக்கிறேன். பிறகு எட்டு திரைப்படங்கள் தொடர் தோல்வி அடைந்திருக்கின்றது. படம் வெற்றி பெறாததற்கு நான் தான் காரணம். பார்வையாளர்கள் மாறிவிட்டார்கள். அவர்களுக்கு தகுந்தாற்போல் நான் தான் மாற வேண்டும். தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வி அடைவது என்றால் நான் மாற வேண்டியதற்கான அலாரம்தான் என பல கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.