செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ரெண்டு விஷயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன்.ஒன்று மானியத்தை யார் யாரெல்லாம் விட்டுக் கொடுப்பீர்கள் என்கின்ற விருப்பத்தை மக்களிடமே கொடுத்தார் பிரதமர் மோடி. யார் யாருக்கெல்லாம் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் என்று கேட்டவுடன்,  இந்த நாட்டில் இருக்கின்ற இலட்சக்கணக்கான மக்கள் எங்களுக்கு மானியம் வேண்டாம் என விட்டுக்கொடுத்தார்கள்.

இன்னொரு முக்கியமான காரியம் என்ன பண்ணாரு ? சுதந்திர இந்தியாவில இதுவரைக்கும் கொடுத்த சிலிண்டரோட கிட்டத்தட்ட 30%,  40% புது சிலிண்டர் இணைப்புகளை ஏழைப் பெண்களுக்கு இலவசமாக கொடுத்தார். தயவு செய்து காங்கிரஸையும் – பிஜேபியும் இதுல ஒப்பிடாதிங்க. புதிதாக வருஷத்துக்கு ஒரு கோடி பெண்கள் இலவச இணைப்பு பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் 200 ரூபாய் மானியம் இந்த இதுல அறிவிப்புல இருக்கு.

உஜ்வாலா திட்டத்தில் புதிதாக எல்லோருக்கும் 200. பொதுவான விலை குறைப்பு. இது இல்லாமல் இன்னொரு 200 ரூபாய் மானியம். அந்த புதிதாக உஜ்வாலா திட்டத்தில் இணைந்தவர்களுக்கு…  அப்போ கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா…. பத்து கோடி பெண்களுக்கு 400 ரூபாய் மானியம் வருது.  விலை குறைப்பு,  மானியம் என 400 ரூபாய் குறையுது. மத்தவங்க எல்லாருக்கும் 200 ரூபாய் குறையுது.

பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள்ள கொண்டு வரணும்னு நாங்க சொல்றோம். மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுத்தால் அதிலும் கணிசமாக குறைக்க முடியும்.  பெட்ரோல்,  டீசல் இல்லாமல் இந்த நாட்டுல மாற்று எரிபொருள் எதனால் பயன்பாட்டால் காரை இயக்குவதற்கு மத்திய அரசாங்கம் புதிய திட்டத்தை செயல்படுத்தி அதை வெற்றிகரமாக இயக்கி காட்டி இருக்கிறார் திரு. நிதின் கட்கரி அவர்கள்.

நம்ம மாற்று எரிபொருளை நோக்கி போகணும். சோலார் வரணும். விண்டு வரணும் எத்தனால் மாதிரியான மாற்று எரிபொருள் வரணும். எத்தனை நாளைக்கு வெளிநாட்டில் இருக்கிற எரிபொருளையே நம்பிட்டு இருக்க முடியும் என பேசினார்.