சன் தொலைக்காட்சியில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்கள் ஒளிபரப்பாகிறது. இதற்கிடையில் ஒரே ஒரு திரைப்படம் மட்டும் ஒளிபரப்பாகும். இந்நிலையில் சன் டிவி சீரியலில் டாப்பில் இருக்கும் ஒரு தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சுந்தரி, கயல், வானத்தைப்போல, கண்ணான கண்ணே, எதிர்நீச்சல் ஆகிய சீரியல்கள் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் கண்ணான கண்ணே என்ற தொடர் முடிவுக்கு வரப் போவதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்டதும் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.