வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்.1ம் தேதி இலங்கை கடற்பகுதியில் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, டெல்டா மாவட்டங்களில் பிப்.1ம் தேதி கனமழை வெளுத்து வாங்கும் என்றும், இலங்கையையொட்டிய கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம்  எச்சரித்துள்ளது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 11 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இலங்கைக்கு தென்கிழக்கு உருவாக்கி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடலில் காற்று அதிகமாக வீசுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கடலில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.