‘பெஞ்சல்’ புயல் காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. கேரளா மாநிலத்திலும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’ வைக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. சபரிமலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மலையேறி செல்கின்றனர். அதோடு சன்னிதானத்திலும் பக்தர்கள் பெய்யும் மழையிலும் நனைந்தபடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த கனமழையின் காரணமாக பம்பை ஆற்றில் நேற்று தண்ணீர் வறுத்து அதிகரித்தது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பக்தர்களுக்கு ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றில் தண்ணீர் வரத்தை கண்காணிக்கும் வேலையில் வருவாத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதோடு மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர். கேரளாவில் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.