
அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்று தென் மாவட்டத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்களுக்கு – விவசாயத்திற்கும்- குடி நீருக்கும் ஆதாரமாய் இருப்பது முல்லை பெரியாறு அணை. அதையும் காத்தது அண்ணா திமுக அரசாங்கம். முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தி இன்றைக்கு 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தியதற்கும் நாம் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் விடியோ திமுக அரசு பொறுப்பேற்று அதை கிடப்பில் போட்டு விட்டார்கள்.
இன்றைக்கு மருத்துவத்துறையில் பல்வேறு சாதனையை படைத்தோம். ஆறுமுறை உடல் உறுப்பு தானத்திலே தமிழ்நாடு அரசு தேசிய அளவிலே விருதுகளை பெற்றோம். 2000 அம்மா மினி கிளினிக் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவதற்காக துவங்கினோம். ஆனால் விடியா திமுக அரசாங்கம் அதுக்கு மூடு விழா கண்டுவிட்டது.
ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை படைத்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை பொய்தான் மூலதனம். பொய் பேசி மக்களை ஏமாற்றியவன் இல்லை. இந்த பழனிச்சாமி சாதித்து காட்டுகிறவன்.
அதேபோல ஏழு சட்ட கல்லூரிகளை நாம் திறந்து வைத்தோம். தமிழகத்தில் 21 பன்முக தொழில்நுட்பக் கல்லூரிகளை திறந்தோம். நான்கு பொறியியல் கல்லூரிகளை திறந்தோம். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகிலே ஊட்டு ரோட்டிலே 1230 கோடியில 1102 ஏக்கரில் ஆசியாவிலேயே மிகப்பெரிய காடு பூங்காவை நாம் கொடுத்தோம்.
புதிதாக 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்தோம். 2030ல் உயர்கல்வி படிக்கின்ற அந்த எண்ணிக்கையை 2019 நூற்றுக்கு 51 பேர். உயர்கல்வி படிக்க வைத்து சாதனை படைத்தோம். இந்தியாவிலேயே உயர் கல்வி படிப்பதிலே முதல் மாநிலம் தமிழ்நாடு என தெரிவித்தார்.