தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வருபவர் சமந்தா. இவர் யசோதா திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி என்ற படத்திலும், ஹிந்தியில் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா நீண்ட நாள்கள் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில் மயோசிடிஸ் எனும்‌ நோயிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என கூறியுள்ளார். முன்பை விட தற்போது தன்னுடைய உடல்நலம் நன்றாக இருக்கிறது எனவும் கூடிய விரைவில் அந்த நோயின் பிடியில் இருந்து முழுமையாக மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் சமந்தா கூறியுள்ளார். மேலும் சமந்தாவின் இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் உங்களுக்கு சீக்கிரம் குணமடைந்து விடும் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.