பெங்களூருவை சேர்ந்த ஒருவர் தன் காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி வாயிலாக மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நைட் ஷிப்ட் பணிக்கு செல்வதால் வீட்டில் உள்ள காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் அந்த கணவனின் ஸ்மார்ட் போனிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்தபோது தான் மனைவியின் செயல் அவருக்கு தெரியவந்துள்ளது. எனினும் காரில் ஜிபிஎஸ் உள்ளது என்பதை அறியாத மனைவி வழக்கம் போன்று தன் காதலுடன் சென்று வந்துள்ளார்.

இது தொடர்பாக அந்த கணவர் கூறியதாவது “சென்ற வருடம் நான் இரவு பணியில் இருந்தபோது யாரோ ஒருவர் என் காரை எடுத்து சென்றதை ஜிபிஎஸ் டிராக்கர் வாயிலாக அறிந்தேன். அப்போது நள்ளிரவில் ஹோட்டல் ஒன்றுக்கு என் காரில் சென்றார்கள். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு கார் வந்திருக்கிறது. அதனை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த ஹோட்டலுக்கு சென்று விசாரித்தபோது தான் என் மனைவியும் அவரது காதலனும் அறை எடுத்து தங்கியது தெரியவந்தது” என அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து நேரடியாகவே மனைவியிடம் கேட்டபோது காதலுடன் சேர்ந்து கணவனை மிரட்டி உள்ளார். அந்த பெண் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பெண் கர்நாடகாவில் தலைமுறைவாக உள்ளார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 2016 ஆம் வருடம் திருமணமான இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.