இந்தியாவில் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சரியான முறையில் சென்றடைய வேண்டும் என்பதற்காக கிரைன்ஸ் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, பட்டு வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளும் இணைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த இணையதளத்தில் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண், மொபைல் நம்பர், நில விவரங்கள், வங்கி சேமிப்பு கணக்கு மற்றும் புகைப்படம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த இணையதளத்தில் விவசாயிகள் தங்களுடைய விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு தயக்கம் காட்டுவதாக தற்போது வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசின் சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனிவரும் காலத்தில் கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவு செய்தால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்ற நிலை ஏற்படலாம். எனவே விவசாயிகள் முறையாக இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் குறிப்பாக தமிழக விவசாயிகள் க்ரைன்ஸ் இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு தயக்கம் காட்டுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.