பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்கள் குறித்து, மந்திரிசபை குழு 2025-26 ஆம் ஆண்டில், கரும்பின் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஒரு குவிண்டாலுக்கு ரூ.355 வீதம், 10.25 சதவீத விகிதத்துக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

10.25 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள ஒவ்வொரு 0.1% 3.46 பிரீமியம் தொகை கிடைக்கும், குறைவாக உள்ள ஒவ்வொரு 0.1 சதவீதத்துக்கும் 3.46 பிரிமியம் தொகை குறைக்கப்படும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 9.5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் சர்க்கரை ஆலைகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இந்த விவசாயிகளுக்கு வரும் 2025-26 ஆம் ஆண்டில், குவிண்டாலுக்கு ரூ.329.05 கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.