திருவான்மியூர் பகுதியில் அறிமுகமே இல்லாதவரை நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி தகவல்:

    – கோயம்புத்தூர் செந்தில்குமார், வயது 50, பெயின்டரான இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் இரண்டு ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து திருவான்மியூர் திருமுடிசித்தர்கோயில் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவம்:

  திடீரென நேற்று  இரவில், திருவான்மியூர் குப்பம் பகுதியில் வசிக்கும் 52 வயதான கமல் உசேன், செந்தில்குமாரின் வீட்டிற்குள் நுழைந்து அவரை கத்தியால் குத்தினார். இதனால் படுகாயமடைந்த செந்தில் சம்பவஇடத்திலையே உயிரிழந்தார்.

சட்ட நடவடிக்கை:

    – கொலையை தொடர்ந்து கமல் உசேன் திருவான்மியூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த காவல்துறை அதிகாரிகள், கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

கமல் ஹுசைனின் பின்னணி:

    கொலையாளி கமல் ஹுசைன் என்பவரது  தாயார் இந்து, அவரது தந்தை முஸ்லிம். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

நோக்கம்:

    – கமல் ஹுசைனுக்கும் செந்தில்குமாருக்கும் இடையே ஏதாவது தனிப்பட்ட விரோதம் அல்லது கோபம் இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்ள, எங்கள் இருவருக்கும் இடையே எந்தவிதமான பழக்கவழக்கங்களோ அல்லது மோதல்களோ இல்லை எனவும்,  செந்தில்குமாரைப் பார்க்கும் போதெல்லாம் தனக்கு கோபம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வரும். இதை கடவுளிடம் தெரிவித்தேன். இதையடுத்து செந்தில்குமார் மோசமானவர், நல்ல எண்ணம் அல்லாதவர் எனவே அவரை கொன்று விடு என  கடவுள் அறிவுறுத்தியதால்  கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் கமல் உசேன் கூறியதாக கூறப்படுகிறது. அவர் கூறியது உண்மை தான அல்லது வேறு காரணம் உள்ளதா ? என  இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.