ஜி20 மாநாட்டுக்காக சாலைகளை அலங்கரிக்கும் அடிப்படையில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் மாயமான வழக்கில், 50 வயது முதியவரை குருகிராம் காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். அவரிடம் இருந்து விலையுயர்ந்த கார் மற்றும் திருடப்பட்ட தொட்டி செடிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது, மன்மோகன் என்ற 50 வயது நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரது விலையுயர்ந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று கூறினர். இதனிடையே திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட அந்த கார் ஹரியாணா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்டதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து 50 வயது நபர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.