ஒவ்வொரு வருடமும் தொடங்கும் போது மக்களின் நிதி சார்ந்த விஷயங்களில் பல விதிமுறைகள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி 2024 ஆம் ஆண்டு சில புது இயர் விதிமுறைகளுடன் அறிமுகமாக உள்ளது. இந்த மாற்றங்கள் சாமானியர்களின் அத்யாவசிய தேவைகளுக்கான பொருட்களின் மீது அமல்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் பாதிக்கப்படலாம். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
2024 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் புதிய ரூல்ஸ்:
1. டிமேட் கணக்கில் நாமினியை சேர்க்க வேண்டும்.
2. ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்தல்
3. வங்கி லாக்கர் ஒப்பந்தம்
4. சிம் கார்டுக்கு பேப்பர் KYC தேவையில்லை
5. மாணவர்களுக்கான விசா மாற்றங்கள்
டிமேட் கணக்கு:
டீமேட் கணக்கு என்பது பங்கு வர்த்தகம் செய்யும் அனைவருக்கும் முக்கியமான ஒன்று. இதில் நாமினியை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் டிமேட் கணக்கில் பங்குகளை வாங்கவோ, விற்கவும் முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை:
ஆதார் வைத்துள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பிறகு அடையாளச் சான்று ஆவணத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் 50 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும்.
சிம்கார்டு:
2024 ஆம் ஆண்டு முதல் புதிய சிம் கார்டை வாங்குவதற்கு தொலை தொடர்பு துறையின் அறிவிப்பின்படி காகித அடிப்படையிலான கேஒய்சி செயல்முறை ஜனவரி 1ஆம் தேதி முதல் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி லாக்கர்:
இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் 31ம் தேதிக்குள் திருத்தப்பட்ட வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட கடைசி தேதியாக நிர்ணயித்துள்ள நிலையில் அப்படி செய்யவில்லை என்றால் அவர்களது லாக்கர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் முடக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கான விசா:
கனடா வரும் சர்வதேச மாணவர்களுக்கான விதிகளில் மாற்றங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம் மாணவர்களின் வாழ்க்கை செலவு நிதி தேவையை இரட்டிப்பாகும் என்று குடியரசு அமைச்சர் தெரிவித்துள்ளார்.