ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் ஆடித் திருக்கல்யாண விழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான ஆடி திருக்கல்யாணத் திருவிழா இன்று துவங்கி 29 ஆம் தேதி வரை என 16 நாட்கள் விமர்சையாக நடைபெற உள்ளது.

இன்று காலை 10:30 மணிக்கு மேல் 12 மணிக்குள் அம்பாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா கோலாகலமாக தொடங்க உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று இரவு 8:00 மணிக்கு வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வருவார்.