
நெல்லை மாவட்டம் இட்டமொழி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுக பாண்டி(30). இவருடைய மனைவி நித்யா(25). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நித்யா தன்னுடைய பொருட்களை எடுப்பதற்காக ஆறுமுக பாண்டியின் வீட்டிற்கு சென்றிருந்தார். அவர் நேற்று மாலை அங்கு சென்றிருந்தபோது ஆறுமுக பாண்டி நித்யாவுடன் தகராறு செய்தார்.
அவர்களுக்குள் தகராறு முற்றியதால் கோபத்தில் கட்டையால் தன் மனைவியை தாக்கினார். இதில் நித்யாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் இது தொடர்பாக நித்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆறுமுக பாண்டியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.