தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியில் வசித்து வந்தவர் பிரசாத் (33). இவர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி பிரமுகராக இருந்துள்ளார். பிரசாத்துக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பிரசாத் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் நடத்தி வந்தார். அதே காலணியில் அனீஸ் ரகுமான் (40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்தி ஜோதா(30) என்ற மனைவி உள்ளார். இவர் அந்தப் பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அனீஸ் ரகுமான் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைதாகி ஆறு மாதங்களுக்கு மதுரை மத்திய சிறையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் சித்தி ஜுனோதா ஒரே காலணியே சேர்ந்த பிரசாத்துடன் பழகி வந்துள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசி வந்துள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சிறையில் இருந்து வெளிவந்த அனீஸ் ரகுமானிடம் தெரிவித்துள்ளனர். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.  இதில் ஆத்திரம் அடைந்த ரகுமான் பிரசாத்தை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதன்படி அனீஸ் ரகுமான் மற்றும் அவரது நண்பர் பிரசாத்தை பின் தொடர்ந்து கவனித்து வந்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ நாளன்று பிரசாத்தை கொலை செய்வதற்காக அவரைப் பின் தொடர்ந்து உள்ளனர். இதனை அறிந்த பிரசாத் தப்பி ஓடி உள்ளார். இந்த நிலையில் விடுதிக்குள் சென்ற பிரசாத்தை அனீஸ் ரகுமான் மற்றும் அவரது நண்பர்  மடக்கிப் பிடித்து கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக ஓட ஓட குத்தி கொலை செய்துள்ளனர்.

இது குறித்து அறிந்த உத்தமபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிரசாத்தின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த அனீஸ் ரகுமான் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நடுரோட்டில் பார்வேர்ட் பிளாக் கட்சி பிரமுகர் புத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.