வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் இருக்கும் பத்தல பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து வனத்துறையினரும் போலீசாரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டி ஆந்திர வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழந்தது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆந்திர மாநில வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர மற்றும் தமிழக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரமாக மோதிய வாகனம்…. இறந்து கிடந்த பெண் சிறுத்தை…. வனத்துறையினர் விசாரணை…!!
Related Posts
“ஓடும் ரயிலில் தூங்கிய பெண்ணுக்கு அரசு அதிகாரியால் நேர்ந்த கொடூரம்”…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜிம்ரிஸ் ராஜ்குமார் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலகிரி மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருக்கிறார். இவர் கடந்த 7-ம் தேதி பணி நிமித்தமாக சென்னைக்கு ரயிலில் சென்றுள்ளார். அப்போது அவருடைய எதிர்…
Read more“பேருந்துக்கடியில் தூங்கிய டிரைவர்”…. நொடிப்பொழுதில் தலைநசுங்கி பலி…. பெரும் சோகம்…!!!
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பட்டி பகுதியில் கருப்பசாமி (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் பேரூரிலிருந்து பீளமேடு பாலிடெக்னிக் கல்லூரி வரை பேருந்தை ஓட்டி சென்றார். அன்று இரவு…
Read more