வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் இருக்கும் பத்தல பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து வனத்துறையினரும் போலீசாரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டி ஆந்திர வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழந்தது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆந்திர மாநில வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர மற்றும் தமிழக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரமாக மோதிய வாகனம்…. இறந்து கிடந்த பெண் சிறுத்தை…. வனத்துறையினர் விசாரணை…!!
Related Posts
“கணவனுடன் சேர்ந்து வாழ ஏங்கிய பெண்”.. கோவிலுக்கு சென்றவர் வீட்டிற்கு வரவே இல்ல.. 8 மாதங்களுக்குப் பின் எலும்பு கூடாக மீட்கப்பட்ட அதிர்ச்சி… பரபரப்பு பின்னணி…!!!
திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகே மாடன் பிள்ளை தர்மம் கிராமம் உள்ளது. இங்கு சிவசிலங்கரை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கயல்விழி (38) முதுகலை பட்டதாரி. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணம்…
Read moreபரபரப்பு…! கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்து…. சாலையோரம் நின்ற 2 பெண்கள் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்….!!
கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக…
Read more