துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியதுடன் 10000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலநடுக்கம் லெபனான், இஸ்ரேல், ஜோர்தான், கிரீன்லாந்து போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீட்பு பணிகளில் துருக்கி அரசுக்கு உதவுவதற்காக இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றது.

இந்த நிலையில் நிலநடுக்கத்தில் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு புதைந்தார். அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் ரசிகர்கள் பெரும் கவலையில் இருந்தனர். ஆனால் கிறிஸ்டியன் அட்சு ஹடேய் என்ற இடத்தில் மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக துருக்கிக்கான கானா தூதர் தகவல் வெளியிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.