ED வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் வாதிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அவற்றை இதுவரை தரவில்லை. அவை கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் இந்த வழக்கில் மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.