BJP தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பணம் கொண்டு வரப்பட்டதாக கர்நாடகாவின், கப்பு தொகுதியின் காங்., வேட்பாளர் வினய் குமார் சொர்கி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது, அந்த ஹெலிகாப்டரில் பணம் கொண்டு வரப்பட்டதாக வினய் குமார்  சொர்கி தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றார்.